புதன், 31 டிசம்பர், 2008

வீரபாண்டி கோட்டையிலே!

மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே குறுக்குச்சாலை என்னும் ஊருக்கு அருகே இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கோலோச்சிய பாஞ்சாலங்குறிச்சி. 36 ஏக்கரில், 36 அடி உயர மதில் சுவர்களுக்குள் கம்பீரமாக காட்சி தந்த கோட்டையிலும் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்திலும் தற்போது எஞ்சி இருப்பது தரைமட்டமான சிதிலங்கள்தான். வெள்ளையர்கள் கோட்டையும் மதில் சுவர்களையும் சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

தமிழக அரசு அங்கே ஒரு நினைவிடத்தை எழுப்பி பராமரித்து வருகிறது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்தைய கோட்டையின் தரைப்பகுதி மட்டும் தற்போது மிச்சமுள்ளது. அதைச் செப்பனிட்டு பராமரிக்கும் வேலையை தொல்பொருள் ஆய்வுக்கழகம் மேற்கொன்டு வருகிறது. திருச்செந்தூரை நோக்கி செல்லும் 2 மைல் நீள சுரங்கப்பாதையின் முகப்பையும் காணலாம். அந்த பாதை தற்போதும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.





சுரங்கப்பாதையின் முகப்பு:









தர்பார் இருந்த இடம்:

3 கருத்துகள்: