சனி, 3 ஜனவரி, 2009

Something Fishy!

தூத்துக்குடி சென்ற போது மீனவர்கள் வலை வீசி மீன் பிடிப்பதை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்தது.




முதலில் கடலுக்குள் எடுத்துச் செல்ல வலையை கப்பலில் ஏற்றுகிறார்கள்.









வலையில் கட்டப்பட்டுள்ள கயிற்றை
கரையில் இருந்து இழுக்கிறார்கள். இருபக்கமும் தலா 12-15 பேர் சேர்ந்து முழு வலையயும் இழுத்து முடிக்க சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது.





கயிற்றுக் கற்றைகளின் இடுக்குகள் சிக்கியுள்ள நண்டுகளை பிடித்து கொடுக்கை ஒடித்து அங்கே விளையாடும் சிறார்களுக்கு கொடுக்கிறார்கள்.








கரை சேரவிருக்கும் இரைக்காக வட்டமிடும் கழுகு.





வலை மீது அமர்ந்து விருந்துண்ணும் நாரைகள்







ஓசிச் சாப்பாடு!!

I got this mail on the second day of January 2009 at around 6.30 pm:

Dear Team Members,
As you know Conference was a tremendous success. We thank you for yoursplendid effort during the Centenary Conference. The hard work of all thevolunteers was highly appreciated by one and all.
On behalf of the Director, Associate Director and the Organizingcommittee, it is our pleasure to invite you all for the dinner gettogether. Director and Associate Director will be with us during theoccasion.
Time- 7:00pmDate - Tuesday, 6th January, 2009Venue: IISc Main Guest house (Open area)
Thanks very much.
Sincerely
Nagaraj and Narahari


நேரா ஸ்பாட்டுக்கு போயிட்டேன். ஈ காக்கா இல்ல அங்க. கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணி பாக்கலாம்னு சுத்திட்டிருந்தேன். ஏழேகால் வரைக்கும் யாரையும் காணோம். அப்புறம் வந்து மெயில்ல தேதியப் பார்த்தேன்!

புதன், 31 டிசம்பர், 2008

தூத்துக்குடி கடற்கரை










தொப்பை நீக்கம்!


அறுத்து எடுத்துவிடுவார்களோ என்னவோ?!

வீரபாண்டி கோட்டையிலே!

மதுரைக்கும் தூத்துக்குடிக்கும் இடையே குறுக்குச்சாலை என்னும் ஊருக்கு அருகே இருக்கிறது வீரபாண்டிய கட்டபொம்மன் கோலோச்சிய பாஞ்சாலங்குறிச்சி. 36 ஏக்கரில், 36 அடி உயர மதில் சுவர்களுக்குள் கம்பீரமாக காட்சி தந்த கோட்டையிலும் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்திலும் தற்போது எஞ்சி இருப்பது தரைமட்டமான சிதிலங்கள்தான். வெள்ளையர்கள் கோட்டையும் மதில் சுவர்களையும் சின்னாபின்னமாக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

தமிழக அரசு அங்கே ஒரு நினைவிடத்தை எழுப்பி பராமரித்து வருகிறது. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முந்தைய கோட்டையின் தரைப்பகுதி மட்டும் தற்போது மிச்சமுள்ளது. அதைச் செப்பனிட்டு பராமரிக்கும் வேலையை தொல்பொருள் ஆய்வுக்கழகம் மேற்கொன்டு வருகிறது. திருச்செந்தூரை நோக்கி செல்லும் 2 மைல் நீள சுரங்கப்பாதையின் முகப்பையும் காணலாம். அந்த பாதை தற்போதும் இருப்பதாகக் கூறுகிறார்கள்.





சுரங்கப்பாதையின் முகப்பு:









தர்பார் இருந்த இடம்:

வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இல்லம்

தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இல்லம். தற்போது அந்த வீட்டில் ஒரு நூலகம் அமைத்து பராமரித்து வருகிறார்கள். அதிக எண்ணிக்கையில் நூல்களைக் கொண்டு செம்மையாக செயல்பட்டு வருகிறது அந்த நூலகம். அவர் ஒரு பெரிய வணிகராக இருந்த போதிலும், வீடு சிறியதாகத்தான் இருக்கிறது. தனது செல்வங்களை ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கினார் என்று அங்கிருக்கும் மக்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.














மகாகவி பாரதியாரின் வீடு

மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில், மதுரையிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் இருக்கும் எட்டயபுரத்தில் இருக்கிறது மகாகவி பாரதியார் பிறந்த வீடு. பாரதியாரைப் போற்றும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு முறை இங்கு சென்று வர வேண்டும். அவர் உலாவிய தரையையும் சாய்ந்த சுவர்களையும் தொட்டுப்பார்ப்பது ஒரு சிலிர்ப்பான அனுபவம்!
















செவ்வாய், 30 டிசம்பர், 2008

தேங்காயும் clutch plate-டும் - II

உறவினர் வீட்டிற்குச் செல்லும் போது செய்ய வேண்டிய சடங்குகளான நலம் விசாரித்தல், சிரித்துப் பேசுதல், குழந்தையைக் கொஞ்சுதல், அன்பளிப்பு அளித்தல், வயிற்றுக்கு ஈதல் முதலியன முடித்துவிட்டு இரவு ஏழேமுக்கால் மணிக்கு பழனியிலிருந்து கிளம்பினோம். எங்கள் ஓட்டுனர் பாலு ஏனோ அவர்கள் வீட்டில் உணவருந்தவில்லை. திண்டுக்கல் வருவதற்கு சற்று முன்பு அம்மாவிடம் தொலைபேசி நாங்கள் இருக்குமிடத்தைத் தெரிவித்துவிட்டு இரவு பதினோரு மணிக்கு முன்பாக வீடு வந்தடைய வாய்ப்பு இருப்பதாகக் கூறினேன். திண்டுக்கல் நகர எல்லையைத் தாண்டிய பின்பு ஒரு இரவு நேர உணவு விடுதி அருகே தான் சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தினார் பாலு. சாப்பிட்டுவிட்டு கிளம்பியபோது நேரம் இரவு 9.30 மணி.

வண்டி ஓட தொடங்கியதும் 'க்வில்ச்' 'க்வில்ச்' என்று சத்தம். நான் அந்த சத்ததில் இருந்த இசையை ரசித்தேன். அது முன்னறிவித்த சங்கடங்களையும் ரசனையுடன் எதிர்பார்த்தேன். பாலு வண்டியின் வேகத்தை அதிகரித்தும் குறைத்தும் சத்தத்திற்கான காரணத்தை தன் இருக்கையிலுருந்தே கண்டுபிடிக்க முயன்றார். சிறிது நேரத்தில் அந்த முயற்சியைக் கைவிட்டு வண்டியை ஓரம்கட்டினார். அம்பாஸிடரின் தொப்பையைத் திறந்து ஏதொ துழாவிவிட்டு "ஃபேன் பெல்ட் லூஸா இருக்குங்க. டைட் பண்ணினா சரியாப்போயிடும்" என்றார். வண்டியினுள் கவலை ரேகைகள் படர்ந்தன.

குறைந்த வேகத்தில், மெக்கானிக் கடை ஏதேனும் தென்படுகிறதா என்று இருபக்கமும் பார்த்துகொன்டே பயனித்தோம். தொடர்ந்து பீதியைக் கிளப்பிக்கொண்டேயிருந்த சத்தம் திடீரென்று நின்றது. இதற்கு சந்தோஷப்பட வேண்டுமா வருத்தப்பட வேண்டுமா என்று ஒருவருக்கும் புரியவில்லை. வண்டியை வேகமெடுத்தார் பாலு. அந்த தெம்பில் வழியில் திறந்திருந்த ஒரு கார் ரிப்பேர் கடையை கண்டும் காணாமல் விட்டுவிட்டேன். பாலுவிடமும் சொல்லவில்லை. அடுத்த பத்தாவது நிமிடம், "க்ளட்ச் வேலை செய்யவில்லை" என்று கூறி பதற்றத்துடன் பெடலை உதைத்தார் பாலு. 'க்ளீஈஈஈஈர்ர்ர்ர்ச்ச்ச்'. வண்டி நின்றுவிட்டது.


நான் சொல்ல விரும்பிய கதை இத்துடன் முடிகிறது. மேற்கொன்டு என்ன நடந்தது என்று அறிய விரும்புகிறவர்களுக்காக 'பிற்சேர்க்கை'யை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

தேங்காயும் clutch plate-டும் - I

பொள்ளாச்சி. மாலை 4 மணி. திருச்சியை நோக்கி கிளம்பியது எங்கள் கார். காரில் என் மனைவி, மாமனார், மாமியார், அவர்களது ஆஸ்தான ஓட்டுனர் பாலு மற்றும் நான். நாங்கள் கிளம்பிய தகவலை திருச்சியிலிருக்கும் என் அம்மாவிடம் கைப்பேசி மூலம் தெரிவித்தேன்.

"எத்தனை மணிக்கு வருவீங்க?"

பொதுவாக பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வர அதிகபட்சம் ஐந்து மணி நேரம் ஆகும். ஓட்டுனரையும் காரையும் கிண்டல் செய்யும் எண்ணத்தில், "நைட் 2 மணி" என்றேன்.

வெளியூர் பயணம் செல்லும் போது கோவிலில் தேங்காய் உடைத்துவிட்டு கிளம்புவது அவர்கள் வீட்டில் வழக்கம். கருப்பண்ணசாமி கோவில் முன் வண்டி நின்றது. மாமனார் ஒரு தேங்காயால் கோவிலின் முன் செங்குத்தாக ஒரு வட்டம் வரைந்தார். பின் தரையை நோக்கி வேகமாக வீசினார். தேங்காய் உடையவில்லை. உருண்டு ஓடியது. "விடாதீங்க! உடைச்சிட்டு போங்க! அப்படியே விட்டுச்சென்றால் ஆகாது" சுற்றி இருந்த கடைக்காரர்கள் போதித்தார்கள். பாலு தேங்காயை துரத்தி சென்று கையில் எடுத்து ஒரு போடு போட்டார். மீண்டும் தப்பித்துக்கொண்டது. "குடுமியைப் பிய்த்துவிட்டுப் போட்டால்தான் உடையும்", தன் கணவருக்கு என் மாமியாரின் அட்வைஸ். மூன்றாவது முயற்சியில் சிதறின சில்லுகள்.

போகும் வழியில் பழனியில், என் அண்ணனுக்கு (பெரியம்மா மகன்) பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டுப் போவதாக திட்டம். குழந்தைக்கு துணி வாங்குவதற்காக உடுமலையில் நாங்கள் சென்ற கடையில்ஒரு சுவரஸ்யமான தள்ளுபடி திட்டம். வாடிக்கையாளர்களைக் கவர கற்பனைக்கும் எட்டாத பலவித திட்டங்களை நாம் பார்த்திருக்கிறோம். இந்தக்கடையில் கடற்கரையில் சுடுவதற்காக வைத்திருப்பதைப்போல் பலூன்களைக்கட்டி தொங்கவிட்டிருந்தார்கள். அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து உடைக்கவேண்டுமாம். உள்ளே உள்ள கூப்பனுக்கு ஏற்றவாறு தள்ளுபடி தருவார்களாம். பலூனை உடைக்க ஒவ்வொரு பலூனின் மூக்கனாங்கயிற்றிலும் ஒரு ஊசியையும் கட்டி வைத்திருந்தார்கள். நான் ஒரு நீல நிற பலூனை எடுத்து வெடித்ததில், 5% என்று வந்தது. "5% பணம் தந்தால் போதுமா?" என்று கேட்டேன். "5% டிஸ்கௌண்ட் சார்" என்றார்கள்.

தொடரும்...

ஞாயிறு, 28 டிசம்பர், 2008

அபியும் அவுங்கப்பாவும்!

தந்தைப் பாசத்தைப் பிழிந்து ஊட்டும் தற்போதைய தமிழ் திரைப்பட 'trend'-ல் மற்றுமோர் வரவு 'அபியும் நானும்'. மகனுக்கு பதில் மகளை மையப்படுத்தி இருப்பதுதான் வித்தியாசம். ஆனால் அதுதான் படத்தின் சறுக்கலுக்கும் காரணமாகிறது.

மகன் என்றால் வேலையில், தொழிலில் வெற்றி, ராணுவ 'Major', 'heroism' எல்லாம். ஆனால் பெண் என்றால் காதலும் கல்யாணமும்தான் வெற்றியாம்! இது தமிழ்க் கதாநாயகிகளின் காலவரையற்ற சாபக்கேடா, இயக்குனர்களின் குறுகிய மனப்பான்மையா அல்லது கற்பனை வறட்சியா?

அழுகிறது ஆழியார்!

ஆழியார் - பெயரைச் சொன்னாலே மனசில் சிலுசிலுப்பை ஏற்படுத்தும் இடம். சரியான பராமரிப்பு இல்லாததால் அதன் அவலநிலையைக் கண்டு கண்ணீர் விடும் அங்கே இருக்கும் குழாய்கள்!


Life is beautiful

Life Is Beautiful படம் பார்த்தேன். இரண்டாம் உலகப் போர் பின்னணியில் அமைந்த படம். அச்சமயத்தில் தான் படும் கஷ்டங்கள் தன் குழந்தையின் மனதை பாதிக்காத வண்ணம், அதை ஒரு விளையாட்டு போன்ற எண்ணத்தை அதன் மனதில் ஏற்படுத்துகிறார் தந்தை. அற்புதமான படம்.


நான் சொல்ல வந்த விஷயம் இந்த படத்தைப் பற்றி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்து வெளிவந்த 'யூத்' படத்தைப் பற்றி. அந்த படத்தில் காட்டப்படும் அநேக காட்சிகள் 'Life is Beutiful' படத்தில் இருந்து உருவப்பட்டவை. தொப்பியை மாற்றும் காட்சிகள், கடவுளை கேட்டு எல்லாவற்றையும் பெரும் நகைச்சுவை காட்சிகள் அனைத்திற்கும் மூலம் இந்த திரைப்படம் தான்.

இந்த திருட்டுச்செயல்கள் காலம் காலமாக நடந்து வருபவை தான் என்றாலும், தமிழ்ப் படைப்பாளிகளின் இந்த போக்கு என்னை வெட்கி தலைகுனிய வைக்கிறது.

இன்று ரசித்த ஒரு வாசகம்!


கண் கெட்ட பிறகு கதிரவன் வணக்கம்!