சனி, 7 பிப்ரவரி, 2009

நான் கடவுள்

பாலாவின் பட்டறையிலிருந்து மற்றுமொரு உள்ளத்தை உலுக்கும் படம். கதை என்று பெரிதாக ஒன்றுமில்லை. எடுத்துரைக்கப்படும் கருத்துக்களையும் நிஜங்களையும் கோர்ப்பதற்கு ஒரு நூலாகவே கதை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உக்கிரமான சிரசாசனம், கோபப்பார்வை, ஆவேச நடை, துஷ்டர்களை வெறியுடன் வேட்டையாடல், எல்லோரிடமும் அலட்சியம்- படத்தில் ஆர்யா செய்தவை இவ்வளவுதான்.

சாக்கடைச் சகதியில் கிடக்கும் கண்ணாடித் துண்டு சூரிய ஒளி பட்டு ஜொலிப்பது போல அந்த கோரமான கதைக்களத்தில் தன் நடிப்பின் மூலம் அற்புதமாக ஜொலித்திருக்கிறார் பூஜா. தேசிய விருது பெறுவது நிச்சயம் என்று அவருக்கே தெரிந்திருக்கும். அதற்கான பயணச்சீட்டைக் கண்டிப்பாக முன்பதிவு செய்திருப்பார். தமிழ்ப்படத்தில் நாயகிக்கு இப்படி ஒரு கனமான பாத்திரம் அளிக்கப்பட்டிருப்பதும், முன்னணியில் இருக்கும் ஒரு நடிகை இப்படி ஒரு பாத்திரத்தில் லயித்து நடித்திருப்பதும் வியப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.

படத்தின் துவக்கத்தில் பிச்சைக்காரர்களை சிறைபடுத்தி இருக்கும் இடத்தில் காட்டப்படும் காட்சிகள் எப்பேர்பட்ட கல்நெஞ்சக்காரர்களையும் கரைத்துவிடும் வலிமையான காட்சிகளாக அமைந்துள்ளன.

இவை அனைத்தையும் விட காண்போரின் உள்ளத்தில் ஆட்சி செய்வது பின்னணி இசை. குப்பைமேட்டு கோடீஸ்வரன் படத்தில் சர்வதேச விருது கொடுக்கப்பட்ட அந்த இசையில் உள்ள பெருமையை என்னால் உணர முடியவில்லை. ஆனால் இந்த படத்தில், காட்சியில் உள்ள உக்கிரத்தையும், சோகத்தையும், நகைச்சுவையையும் இன்னபிற விவரிக்க முடியாத உணர்ச்சிகளையும் உடலிலும் உள்ளத்திலும் ஊர்வலம் அழைத்துச் செல்கிறது இளையராஜாவின் பின்னணி இசை. என் போன்ற பாமரனும் ரசிக்ககூடிய வகையில், இன்றும் பின்னணி இசையின் மன்னனாக திகழும் மேதைக்கு முன்னே ஆஸ்கர் விருது எல்லாம் சிறுவர் விளையாட்டிற்குச் சமானம்.

பாசமலர் திரைப்படம் வெளிவந்த போது அதைப்பார்த்த மக்கள் திரையரங்குகளிலேயே கண்ணீர் சிந்தினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு திரைப்படம் எப்படி அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் அந்த செய்தியை முழுமையாக நம்பியதில்லை. ஆனால் இன்று அரங்கில் 'அய்யோ' 'அம்மா' என்று உணர்ச்சிவசப்பட்டு மக்கள் அரற்றிய போது அதில் இருக்கும் உண்மையை உணர்ந்தேன்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

Big Brother!




I became curious of these items and digged into the details. It was interesting to know that the visits originated form darpa related network.


It seems that this was the post that was the trigger to these visits. hmmm... Big brother likes to see it all!


(This post is in English for obvious reasons.)

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பச்சை நிறமே பச்சை நிறமே!

பொங்கல் திருநாளின் போது என் மனைவியின் வீட்டாருக்குச் சொந்தமான தோட்டத்தில் பொழுதைக் கழிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் ரசித்த பசுமையான காட்சிகள் உங்கள் பார்வைக்கு.













புதன், 4 பிப்ரவரி, 2009

மீண்டும் ஒரு தடைபட்ட பயணம்!

நான் பயனம் செய்யும் வண்டிகளுக்கு என் மீது அபார பிரேமை போலிருக்கிறது. ஏதாவது பழுதை உண்டாக்கிக் கொண்டு நான் அதனுடனேயே அதிக நேரம் கழிக்க வழி செய்துகொள்கிறது.

இந்த முறை பெங்களூருவிலிருந்து திருச்சி சென்ற அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்து. முன்பு போலவே 'clutch' கோளாறு. இரவு சுமார் ஒன்றரை மணிக்கு தருமபுரி அரசு பணிமனையில் வண்டியை நிறுத்தினார்கள். அரசு பணிமனையில் ஊழியர்களைத் தவிர வேறு ஒருவரும் நுழையக்கூடாதாம். அதனால் பேருந்தில் இருந்தவர்களை பேருந்தை விட்டு இறங்க விடவில்லை. பேருந்திலிருந்தே கைபேசி மூலம் எடுத்ததால் புகைப்படங்கள் தெளிவாக இல்லை. இருப்பதை வைத்துக் கொண்டு நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன்.

இந்த கட்டுரைக்கு 'Pitstop' என்றுதான் தலைப்பு கொடுக்க எண்ணினேன். ஆனால் நன்னன் அவர்கள் என் கண்முன்னே தோன்றி தூய தமிழ்க் கெட்ட வார்தைகளால் திட்டியதால் தலைப்பை மாற்றிவிட்டேன். வாகனங்களை பழுது பார்ப்பதை '' என்று ஏன் சொல்கிறார்கள் என்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன். ஒரு பள்ளமான கட்டமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சக்கரங்களுக்கு இடையேயான நடுப்பகுதி அந்த பள்ளத்திற்கு மேல் வருமாறு வாகனத்தை நிறுத்துகிறார்கள். வண்டிக்கு அடியில் படுத்துக்கொண்டு சிரமப்பட்டு வேலை செய்ய அவசியமில்லை. பள்ளத்தில் தாராளமாக நின்றுகொண்டு சுலபமாக வேலையைச் செய்யலாம்.
பழுது குழியை நோக்கி செல்கிறது எங்கள் பேருந்து
சோர்வுடன் எங்கள் ஓட்டுநர்
ஓட்டுநர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான இலக்கு

மூன்று மணி நேரம் முயன்றும் முழுதாக சரிசெய்ய முடியவில்லை. அங்கிருந்து தட்டுத்தடுமாறி கிளம்பி, திக்கித்திணறி ஊர்ந்து சென்று தருமபுரியிலிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவில் முற்றிலுமாக நின்றுவிட்டது. அதற்குள் மணியும் அதிகாலை அய்ந்தரை (சொற்பிரயோகம்: நன்றி நன்னன்) ஆகிவிட்டிருந்தது. ஒரு சிறுதூர பேருந்து மூலம் அங்கிருந்து சேலத்திற்கு வந்து, பின்னர் மற்றொரு பேருந்து பிடித்து திருச்சி வந்தடைந்தேன்.