வியாழன், 25 டிசம்பர், 2008

சீட்டாடும் உலகம் - விவேகா

எல்லோரையும்
சீட்டாடிக்கொண்டிருக்கிறது உலகம்.

தேவைப்பட்டால்
ரம்மிக்குள் வைத்துப் போஷிக்கவும்
பக்கபலமற்ற உதிரியெனில்
வெளிவீசவும் தயங்குவதில்லை.

தனதேதிர் உள்ள ராஜாவோ ராணியோகூட
ஜோக்கராகிவிட்டால்
கும்மாளமிடுகிறது.

தேவையில்லை எனில்
இதயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு
வைரங்களைப் பொறுக்கும் வழக்கமுடையது.

யாரோ ஒருவரைக் கவிழ்த்துதான்
ஒரு வெற்றி காட்டப்படுகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக