ஞாயிறு, 18 ஜனவரி, 2009

பயணங்கள் முடிவதில்லை...

கடந்த வாரம் சற்று அதிகமாக பயணத்தில் ஈடுபட்டிருந்ததால் எழுத முடியவில்லை. கிட்டத்தட்ட அரசியல்வாதிகளின் சூறாவளிச் சுற்றுப்பயணம் போல் இருந்தது எனது கடந்த வார பயண நிரல்.

09-01-2009, வெள்ளிக்கிழமை இரவு - பெங்களூரு-திருச்சி

11-01-2009, ஞாயிற்றுக்கிழமை இரவு - திருச்சி-பெங்களூரு

13-01-2009, செவ்வாய்க்கிழமை இரவு - பெங்களூரு-திருச்சி (பிறந்த வீட்டில்தான்* தலைப்பொங்கல் கொண்டாட வேண்டுமாம்)

14-01-2009, புதன்கிழமை மதியம் - திருச்சி- பொள்ளாச்சி# (புகுந்த வீட்டில்* மாட்டுப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கமாம்)

15-01-2009, வியாழக்கிழமை இரவு - பொள்ளாச்சி- பெங்களூரு

16-01-2009, வெள்ளிக்கிழமை இரவு - பெங்களூரு- சென்னை (புத்தகக் கண்காட்சி காண)

17-01-2009, சனிக்கிழமை இரவு - பெங்களூரு- சென்னை

* மாப்பிள்ளையாகிய நான் பிறந்தது, புகுந்தது

#வழியில் கார் ('car' போன்ற வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தக் கூடாது என்பது என் கருத்து) சக்கரம் பழுதடைந்தது. உபரிச் சக்கரத்தை மாற்றிக்கொண்டு சென்றோம். அருகில் இருந்த பணிமனையில் சென்று பார்த்தபோது சக்கரத்தின் குழாய் கிழிந்திருப்பது தெரிந்தது. அனைத்து கடைகளும் பொங்கல் விடுமுறைக்காக மூடியிருந்ததால் புதிய குழாய் கிடைக்கவில்லை. அந்த பணிமனையிலேயே நல்ல நிலையில் இருந்த ஒரு பழைய குழாயை மாற்றிக்கொண்டு சென்றோம்.

முந்தைய பயணங்கள் போல இம்முறை புகைப்படத் தருணங்கள் அதிகம் இல்லை. நினைவுப் படிமங்கள் தாம். அவற்றை அவ்வப்போது எழுதுகிறேன்.

பொதுவாக பயணப்பொழுதுகளை அந்த சமயத்தில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்பாடல்களைக் கேட்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும், நல்ல பாடல்களை ரசிப்பதற்கும் பயன்படுத்திக்கொள்வேன். ஆனால் இந்த முறை என் பயனத்திற்கு துணை வந்தவர்கள் எஸ்.வீ.சேகரும், கிரேசி மோகனும். http://www.maheshwaran.com/ -ல் அவர்களது பல நாடகங்களுக்கான 'Rapidshare' தளமுகவரி தருகிறார்கள். (இவற்றை தரவிறக்கம் செய்து கேட்பது சட்டவிரோதமானது. நான் இதைப் பரிந்துரைக்கவில்லை :D ).

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரயில் பயணம். தொட்டிலில் தூங்கியபோது கிடைத்த சுகம் இப்போது நம் நினைவில் இருக்காது. ஆனால் அதே உணர்வைத் தருகிறது ரயில் தூக்கம். மென்மையான தாலாட்டு. சீரான இடைவெளிகளில் நிறுத்தம். இரைச்சல் போல தெரிந்தாலும், லயத்துடன் கூடிய இசை. இறங்க வேண்டிய இடம் வரும்போது யாரும் எழுப்பாமல் தானாகவே தூக்கம் கலைதல். பல நாட்களுக்குப் பின் இந்த சுகத்தை மீண்டும் அனுபவித்தேன்!

இந்த பயணங்களில் நான் சென்ற இடங்களில் நடந்தவைகளை அடுத்தடுத்த பதிவுகளில் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக